Sunday, January 5, 2014

தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை

தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை -  நாள்  - 49





ராகம்: தோடி / தேஷ் / ஹமீர் கல்யாணி / பெஹாக் 
 
தாளம் : ரூபகம்/த்ச்ரஜம்பை 



கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான

கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு ...... முகமாறும்

அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்

அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு ...... மறவேனே

இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய ...... குணமான

இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே

பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக

பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.

கருத்துரை : சூரியன் மகனாய் வாலியை  எதிர்த்து தோற்று நின்றவனாய், போர்களத்தில் தூய வீரம் படைத்தவனாய் நின்ற சுக்ரீவனுக்கு அரசாட்சியைப் பெற்றுத் தந்த ஸ்ரீராமனது திருமருகரே! ஏகாதச உருத்திராதிகளின் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவரே! பழனி மலையில் உரைபவரே! மாதர்களின் மயக்கத்தால் உண்டான மனத்தை அடியேன் உடையவனாக இருந்த பொழுதிலும், இறைவனே உன் பொன் போன்ற திருமேனியும், ஆறுமுகங்களையும், தோள்களையும், கூர்மையான வெற்றிவேலையும், பாம்பைப் பிடித்த மயிலையும், ஏழு உலகங்களும் அதிருமாறு கூவுகின்ற சேவலையும், அடியார்கள் துதித்து நல்வாழ்வு பெறுகின்ற திருவடிகளையும் அடியேன் ஒருபோதும் மறக்க மாட்டேன் . 

தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment