Friday, January 3, 2014

தினம் ஒரு திருப்புகழ் - துதி


தினம் ஒரு திருப்புகழ் - துதி  - நாள் - 48



ராகம் : தோடி                                                              தாளம்: ஆதி 


கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத

கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே

வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா

மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்

அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான

பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே

கருத்துரை :  அடியார்கள் படைக்கும் பலவகையான 
உணவுகளை அருந்துகின்ற  யானை முகத்தினையும் 
தாமரை இதைழ் போன்ற சிறிய கண்களையும் உடைய 
விநாயக மூர்த்தியின் தம்பியே! உலகை ஒரு நொடியில் 
வளம் வந்த பச்சை மயில் வாகனரே! ஸ்ரீ வள்ளி தேவசேனா 
சமேதரே! அசுரரை அழித்து தேவரை சிறைமீட்ட்ட 
வேற்படையினரே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே!
சிவபெருமானும், கங்கா தேவியும், பார்வதி தேவியும் 
பெற்ற புதல்வரே! பழநா புரியில் எழுந்தருளியிருக்கும் 
பெருமிதம் மிகுந்தவரே!( இத்திருப்புகழ் முழுவதும் 
துதியாகவே அமைந்துள்ளது).

தொடரும் திருப்புகழ் .........................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment