Thursday, January 2, 2014

தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட

தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட  - நாள் - 47





ராகம்: கானடா / அடாணா                             தாளம்: ஸங்கீர்ணத்ரிபுடை



ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.


கருத்துரை: அசுரர்களின்  உயிரையும், உடைமையையும் 
கொள்ளை கொண்ட பெருமிதமுடையவரே! அடியார்க்கு 
எளியவரே! விருதுகவிராஜா! வள்ளி மணவாளா! ஒரு 
வேளையாவது உன்னுடைய சரணாகத விந்தங்களில் 
அன்பு வைத்திலேன். பழனி மலை என்ற க்ஷேத்திரத்தை 
தரிசித்திலேன். உயர்வற்றதாகிய வாழ்வை ஒழிக்கிலேன் 
பிறவியை அற்றுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றேன் 
ஆனால் அப்பிரவிக்கு வித்தாகிய ஆசையை விட்டு ஒழியமாட்டேனா?

தொடரும் திருப்புகழ் .................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment