Saturday, January 11, 2014

தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட



தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட  - நாள்  - 53








ராகம்: பெஹாக் / நாதநாமக்கிரியா /  மதுவந்தி 

தாளம்:  ஆதி





சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவநோயே

தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்

கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு ...... னடிபேணாக்

கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே

மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி ...... புனைவோனே

மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய ...... முருகோனே

வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை ...... யுடையோனே

வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.

கருத்துரை:  தருமா நெறியிலிருந்து விலகிய அசுரர்களை மாண்டு 
ஒழியுமாறு போர் புரிந்து மகுடத்தை தரித்தவரே! மயிலை, குதிரை 
வாகனம் போல் கொண்ட முருகக் கடவுளே! கலிசை என்ற ஊரில் 
உள்ள மன்னவருடைய உலக கோயிலில் உறைகின்ற பெருமையுடையவரே! 
வீரை என்ற தளத்தில் வாழ்கின்ற குமார சுவாமியே! பழனியில் 
எழுந்தருளியுள்ள வேலாயுதரே! தேவசேனாபதியே! கீழ்மகன் 
தீவினைகளைச் செய்பவன், ஒழுக்கமற்றவன், வஞ்சகன், பிறவி 
நோயை தேடுகின்றவன்; பெருமை, நீதி, நேர்மை, சிறப்பு ஆகிய 
நல்ல குணங்கள் சிறிதும் இல்லாதவன், பொய் பேசுபவன், தீயவன், 
தங்களது திருவடியை நினையாத குப்பை போன்றவன்; 
இப்படிப்பட்டவனாகிய என்னை உமது அடியாருடைய திருக்கொட்டத்தில் 
சேரும் வழியை தந்து அருள் புரிவீராக !

தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment