தேவையானவை:-
கருவேப்பிலை புதியதாக
இஞ்சி .....................ஒரு துண்டு
வெத்தமிளகாய்--5
உப்பு ........................தேவைக்கேற்ப
புளி ..........................கொட்டை பாக்கு அளவு
பெருங்காயம் ..... சிறிது
உளுத்தம் பருப்பு. 2 டீஸ்பூன்
மிளகாய் மட்டும் தனியாக வறுத்துக்கொள்ளவும்
உளுத்தம் பருப்பு தனியாக வறுத்து மிக்சியில் ஓன்று
இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும்
மிக்சியில் கருவேப்பிலை, புளி , உப்பு , பெருங்காயம் ,இஞ்சி
மிளகாய் வற்றல் போட்டு நன்றாக மசிய அரைத்துக்கொள்ளவும்
இதோடு பொடி செய்து வைத்த உளுத்தம் பருப்பு கலந்து கொள்ளவும்
கடுகு தாளித்து போடவும்
கருவேப்பிலை துகையல் தயார்
எத்தனை நாள் எத்தனை முறை கருவேப்பிலை துகையல்
அரைத்தாலும் , பிதுர்க்கள் தினத்தன்று அரைக்கும் துகையலின்
சுவையே அலாதி .......இதை மறுத்துக் கூற எவரேனும் உண்டோ ???
பிதுர்க்களின் ப்ரிதி கருவேப்பிலை துகையல்
நமக்கும் அதுவே , அதுவே
No comments:
Post a Comment