Monday, September 3, 2012

வல்லாரை துகையல் /சட்னி


வல்லாரை கீரையில் வக்கனைகள் 

கூட்டு, பொறியல், துகையல் இது போன்றவை 
செய்யலாம் , உண்மையிலேயே உடலுக்கு 
நல்லது, நினைவாற்றலை அதிகப்படுத்தும் 





 முதலில் துகையல் /சட்னி :- By:- Savithri Vasan
---------------------------------------
 அடுப்பில் வாணலி மிதமான சூட்டில்

ஒரு முட்டை எண்ணை விட்டு ,

பெருங்காயம் பொரித்து,

உளுத்தம் பருப்பு போட்டு,

சின்ன வெங்காயம்,

துருவிய தேங்காய் ,போட்டு வதக்கி ,

பிறகு கீரையையும் போட்டு வதக்கி

இறக்கி வைக்கவும்.

 சூடு சற்று ஆறியதும் , முதலில் புளி, உப்பு
பெருங்காயம் , வெத்த மிளகாய் ,தேங்காய் துருவல்
உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்

பிறகு கீரையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

தேவைபட்டால் வெல்லம் சேர்க்கவும்

இப்பொழுது சுவையான துகையல் தயார் , என்ன சுவைப்போமா
சுகம் பெறுவோமா

நல்லாரை காண்பதும் நன்று அவர் சொல் கேட்பதும் நன்று
வல்லாரை உண்பது அதனினும் நன்று
 



No comments:

Post a Comment