வல்லாரை கீரையில் வக்கனைகள்
கூட்டு, பொறியல், துகையல் இது போன்றவை
செய்யலாம் , உண்மையிலேயே உடலுக்கு
நல்லது, நினைவாற்றலை அதிகப்படுத்தும்
முதலில் துகையல் /சட்னி :- By:- Savithri Vasan
---------------------------------------
அடுப்பில் வாணலி மிதமான சூட்டில்
ஒரு முட்டை எண்ணை விட்டு ,
பெருங்காயம் பொரித்து,
உளுத்தம் பருப்பு போட்டு,
சின்ன வெங்காயம்,
துருவிய தேங்காய் ,போட்டு வதக்கி ,
பிறகு கீரையையும் போட்டு வதக்கி
இறக்கி வைக்கவும்.
சூடு சற்று ஆறியதும் , முதலில் புளி, உப்பு
பெருங்காயம் , வெத்த மிளகாய் ,தேங்காய் துருவல்
உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்
பிறகு கீரையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
தேவைபட்டால் வெல்லம் சேர்க்கவும்
இப்பொழுது சுவையான துகையல் தயார் , என்ன சுவைப்போமா
சுகம் பெறுவோமா
நல்லாரை காண்பதும் நன்று அவர் சொல் கேட்பதும் நன்று
வல்லாரை உண்பது அதனினும் நன்று
No comments:
Post a Comment