தினசரி தியானம்
போற்றுமிடம்
உள்ளத்தினுள் வீற்றிருக்கும் ஒண் பொருளே, உள்ளத்தினுள்ளேயே உன்னை நான் போற்றுவேனாக.
கடலினுள்ளே இருக்கும் மீன் ஆனது நீரை நாடி எங்கும் செல்ல வேண்டியதில்லை. அதன் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது நீர். கடவுள் நம் உள்ளத்தினுள் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் சான்னியத்தை உணர்வதே நல்ல அர்ச்சனையாகும்.
உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம்
தெள்ளியர் அர்ச்சிக்கும் ஆறு.
-ஔவைக் குறள்
No comments:
Post a Comment