Friday, September 7, 2012

பிசிபேளா பாத் (சாம்பார் சாதக் கலவை )


பிசிபேளா பாத் (சாம்பார் சாதக் கலவை )  By: Savithri Vasan
---------------------------------------------------------------------------
கன்னடத்து பைங்கிளி என்றழைக்கப் படும் உணவு வகை
இன்று அனைவராலும் விரும்பி எளிதில் சமைத்து 
உண்ணக்கூடியது.


வீட்டில் விருந்து என்றால் இது இல்லமல் விருந்து இல்லை


உபயோகப்படுத்திய காய்கள்



  • கோஸ்
  • உருளைக்கிழங்கு
  • பச்சை பட்டாணி
  • சின்ன வெங்காயம் 
  • பீன்ஸ்
  • முள்ளேங்கி
  • கேரட் 
  • காப்சிகம் (குடைமிளகாய்)
  • சின்ன வெங்காயம் தோல் உரித்து , வதக்கி
    சிறியதாக நறுக்கிய மற்ற காய்களுடன்
    சேர்த்து ஒரு பாத்திரத்தில்
    போட்டு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
    வேகவைக்கவும் 


பருப்பு 3/4 (முக்கால்) ஆழாக்கு , மஞ்சள் பொடி 
பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும் 





மிக்சியில் பொடி செய்ய தேவயானவை :-
கடலைப் பருப்பு
தணியா 
வெத்தமிளகாய்
தேங்காய் துருவல்
கிராம்பு , பட்டை 




அனைத்தையும் சிறிதளவு எண்ணை விட்டு 
வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும் 

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து
வைத்துக்கொள்ளவும் .




சாதம் மூன்று ஆழாக்கு குக்கரில் வைத்து 
4 விசில் சத்தத்தில் தாயார் செய்து கொள்ளவும் 




           

வெந்த காயில், புளித்தண்ணீரை கலந்து
பருப்பில் அரைத்த பொடியை கலந்து
அந்த கலவையை கொதிக்கும் சாம்பாரில்
போடவும். இதனுடன் வடித்து வைத்த
சாதத்தை கலந்து , 10 நிமிடம் அடுப்பில் வைத்து
நன்றாக அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.

கடுகு , உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
கருவேப்பிலை சேர்க்கவும்
         
சூடான சுவையான , பிசிபேளா பாத் தயார்

இதுதான் காலம் காலமாக நான் தயார்
செய்யும் முறை.

என்ன சார் /மேடம்  நீங்க ரொம்ப பிசியா , இந்த பிஸிபேளா பாத் 
கொஞ்சம் சாப்ட்டு பார்த்து நல்லா இருக்கா சொல்லுங்களேன் 

1 comment:

  1. Vasan sir we borrowed your Bisibelabath preparation and it has come out nicely. Thanks children were enjoyed. Pl see the blogs below.

    http://paramasivam-natarajan.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete