Thursday, September 6, 2012

கொட்டு ரசம்

அள்ளிப் போட்டு ரசம் (கொட்டு ரசம்):- By Savithri Vasan


அன்றாடம் சமைக்கும் எவருக்கும் ஒருநாள்
சற்று அலுப்பு ஏற்ப்படும் ,  அது உடல் அலுப்பு
அல்லது மன சலிப்பு காரணமாக இருக்கும்.

இது போன்ற சமயங்களில் , வேண்டா வெறுப்பாக
ஒரு ரசம் சமைப்போம்  இதற்க்கு பெயர்தான்
அள்ளிப்போட்ட ரசம், அல்லது கொட்டு ரசம்

சரி இதுல அப்டி என்னதான் போடுவோம்
கல், மண் , குப்பையா போடுவோம் ,
ச்ச  ச்ச , அப்டில்லாம் ஒன்னும் இல்லைங்க

பாருங்களேன் இப்ப நான் என்ன என்ன போடறேன்னு

பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் , கொஞ்சம் புளி
துளி பெருங்காயம், 2 ஸ்பூன் குழம்பு பொடி,  கொஞ்சம்
உப்பு.



இவ்ளவுதாங்க , கொட்டு  ரசம் தயார்.

முடிஞ்சா கடுகு தாளிங்க , இருந்தா மல்லி , கருவேப்பிலை
போடுங்க.

எப்டி செஞ்சாலும் சுவை குறையாது.  சாப்டுங்க , சாப்டுங்க
சாப்டுகிட்டே இருங்க.

அவசர கோலம் அள்ளி தெளித்தாளாம் ........அள்ளிப் போட்டு ரசம்
அவளும் வைப்பாளாம்

No comments:

Post a Comment