Sunday, September 9, 2012

குருமா ! குருமா !! குருமா !!!

குருமா ! குருமா !! குருமா !!!  By:- Savithri Vasan




தேவையான காய்கள் :-

உருளைக்கிழங்கு  1/4 கிலோ
முள்ளேங்கி               1
வெங்காயம் (பெரிசு) 4
காரட்                              2
பச்சை பட்டாணி       100 கிராம் (உரித்தது)
பீன்ஸ்                            100 கிராம்
முருங்கைக்காய்       1
தக்காளி                          1/4 கிலோ
பூண்டு பல்                    10


மேலே சொன்ன காய்களை  நறுக்கி , வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும் .



விழுது அரைக்க

தேங்காய் துருவல்     1.1/2 கப்
பொட்டுக்கடலை          4 டீஸ்பூன்
பட்டை                              1 சுருள்
கிராம்பு                              5
பச்சை மிளகாய்             5
வெங்காயம்                     2
பூண்டு                                10 பல்
சோம்பு                               1 டீஸ்பூன்

மேலே சொன்ன வற்றை அப்படியே பச்சையாக
மிக்சியில் போட்டு , (பட்டை ,கிராம்பு மட்டும் -வறுத்து)
அரைத்து வைத்துக்கொள்ளவும் .

வெந்த காய்களை  அடுப்பில் ஏற்றி , அரைத்த விழுதுடன்
1 ஸ்பூன் குழம்புபொடி சேர்த்து  குருமாவில் கலந்து
நன்றாக கொதிக்கவிடவும் .

சோம்பு 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும்




கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து , சுவையான
சூடான குருமா அனைவருக்கும் பரிமாறவும்




குருமா!!! குருமா!!! அதன் சுவை சுகம் வருமா? வருமா ??





.









No comments:

Post a Comment