Friday, September 7, 2012

பாட்டி சித்தப்பாவுக்கு பிசைந்து வைத்திருக்கும் சாம்பார் சாதம் யாருக்கு???

கதையல்ல நிஜம் .......1


இரவு மணி எட்டு , அப்பா வந்துட்டா
எல்லாரும் சாப்பிட வாங்கோ


இதோ வரேம்மா எல்லாரும் தட்டை
அலம்பி கொண்டுபோனோம் , அம்மா
சாதம் போட்டு குழம்பு, (சிலர் பருப்புபொடி )
சாதம் , அடுத்தது மோர் சாதம் எல்லாரும்
சாப்டாச்சு .

இனி அடுத்தது படுக்கை தான்


இருந்தாலும் யாரும் தூங்க வில்லை
ஏதேதோ கதை , பேச்சு தூக்கம் வரவில்லை
தூங்க விரும்ப வில்லை


மணி ஒன்பது , ஒன்பது அரை  ஒன்பதே முக்கால்
முட்கள் நகர மறுக்கின்றதோ, அப்பா மணி 10.00
பாட்டி மணி 10.30 , ஹம்  பாட்டியிடம் இருந்து 
பதில் இல்லை !!!!



ஹ்ம் யாரும் தூங்க வில்லை ,
காரணம் என்ன? காரணம் என்ன ??


பாட்டி சித்தப்பாவுக்க் பிசைந்து வைத்திருக்கும் 
சாம்பார்
சாதம் யாருக்கு ? கிடைக்கும் என்ற
கேள்விக்குறி


பாட்டி இன்னும் சித்தப்பா வரலை


வருவாண்டா நீ தூங்கு


.மணி 10 .30

பாட்டி இன்னும் சித்தப்பா வரலை 



வருவாண்டா ...... இது மீண்டும் பாட்டி


பாட்டி மணி பதினொன்னு
சரிடா எடுத்து நீங்க சாப்பிடுங்கோ


அப்பா சித்தப்பா இன்னைக்கு வரல
பாட்டி பெசஞ்சு வச்ச சாம்பார் சாதம்
நமக்குதான் , நாங்க எல்லாரும்
போட்டி போட்டுண்டு சாப்பிட்டு முடிப்போம்


டொக்... டொக்... டொக் ....
கதவு தட்டப்படும் ஓசை


யாரு
நான்தான் மகாலிங்கம்


கடங்காரா இப்பதான் வரதா ???
உனக்கு வச்ச சாதத்த இவா எல்லாம்
இப்பதான் சாப்டா


இருக்கட்டும்மா நான் 
சாப்டுட்டுத்தான் வந்தேன் ............இது சித்தப்பா


இந்த சாம்பார் சாதத்தின் மகிமை , அனுபவித்தவர்கள்
மட்டுமே உணரமுடியும்,


ஆம் என் பாட்டியின் கைமணம்

2 comments:

  1. Pattiyin kaimanam ninaithu yengum kalam ithu!!!!

    ReplyDelete
  2. Great... Paati saadham pisaindhu rounda elloraum utkaracholli kaiyil tharuvale adharku eedu enai yedaavadhu undo?

    ReplyDelete