தினசரி தியானம்
பிண்டம்
அண்ட நாயகனே, பிண்டமென்னும் என்னூடு நீ நிறைந்துள்ளாய். இதை நான் நன்கு உணர்வேனாக.
கையளவு கடல் நீரை யெடுத்து அதை நன்கு ஆராய்ந்தால் கடல் நீர் முழுதும் ஆராயப்பெற்றதாகிறது. பிண்டமாகிய நமது உடலுக்கு நாயகனாய் இருப்பவனைத் தெரிந்து கொண்டால் அண்ட நாயகனை நாம் அறிந்தவர் ஆகிறோம்.
அண்டத்திலும் இந்தவாறென்று அறிந்திடு
பிண்டத்திலும் அதுவே பேசு.
-ஔவைக் குறள்
No comments:
Post a Comment