Wednesday, September 12, 2012

நெல்லிக்காய் ஊறுகாய்

                                                       நெல்லிக்காய் ஊறுகாய்

பெரிய நெல்லிக்காய்  20

நன்றாக அலம்பி , ஒரு துணியில் நன்றாக
துடைத்து வைக்கவும் நெல்லிக்காயை


தேவையானவை :-

பெருங்காயம்,
உப்பு(தேவைக்கேற்ப)
நீட்டு மிளகாய் (வறுத்து பொடி செய்ய)


அடுப்பில் வாணலியில் 50 மல. எண்ணை  விட்டு பெருங்காயம்
பொரித்து அதில் கடுகு சேர்த்து , கடுகு வெடித்ததும் நெல்லிக்காயை
போட்டு சிறிது வதக்கவும் . இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து
வைத்து கொள்ளவும்

பிறகு  வாணலியில் எண்ணை விட்டு நீட்டு மிளகாய்
வத்தல் வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்

இந்த மிளகாய் பொடியை நெல்லிக்காய் உள்ள பாத்திரத்தில்
போட்டு,தேவையான உப்பு சேர்த்து  நன்றாக் கிளறி விடவும் .
3 நாட்கள் கழித்து நெல்லிக்காய்
நீர்விட்டுக்கொண்டு தள , தள என்று வந்திருக்கும்




பிறகு அதை உபயோகப்படுத்த ஆரம்பிக்கவும்

ஒரு முறை செய்ததை ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்


ஒரு நெல்லிக்காய் , ஒரு அப்பிளுக்கு சமம்

1 comment:

  1. please remove the pictures. Its copyrighted by me and also remove any other pictures of mine.

    ReplyDelete