Friday, September 7, 2012

வசிஷ்ட பாரதி வம்சா வளி

வசிஷ்ட பாரதி வம்சா வளி                     By:S.S.VASAN Grand Son of Shri. V.Vasishta Bharathi



நான் தொடர்ந்து எழுத இருப்பது எனது பாட்டனார் ( அப்பாவின் அப்பா)
புரனசாகரம் கம்பராமாயணம் வசிஷ்ட பாரதியாரின் வம்சா வழி பற்றிய
அவருடைய குறிப்புகளில் இருந்து.


இவர் தோன்றிய காலம் 1872 , மறைவு 1945,


இவரைப்பற்றிய குறிப்புகளை இவர் தனது சுய சரிதையாக தான் வாழ்ந்த
காலத்திலேயே சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளிதழில் பதித்திருக்கின்றார்
அதனை நான் பகுதி பகுதியாக இங்கே பதிய விழைகின்றேன்.


அவர் வணங்கிய விநாயகரை தொழுது இதை துவங்குகின்றேன்




                                                        வசிஷ்ட பாரதி வம்சா வளி
                                                       பூர்வீகர் காலமும், நிலையும்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண் டெழுத்தினால்

இற்றைக்கு முன்னூறு வருடங்களுக்கு முன் தேசம் முழுவதும் 
ஆளுகின்ற நியாய அரசர்கள் இன்றி நாட்டு குழப்பம் அடைந்து இருந்தது
கர்நாடக வடுக நாயகர்கள் தஞ்சை, திருச்சி மதுரை முதலிய இடங்களிலும் 
முகலாயர்கள் வட திசையிலும் வியாபித்து இருந்தார்கள்.
மஹாராட்டிரரும் இடையிற் புகுந்து தஞ்சையில் குடியேறி 
ஆண்டுவந்தார்கள். இந்நிலையில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் 
சென்னையில் புகுந்து வியாபாரம் செய்யத் தொடங்கிய காலம். 
உள்நாட்டில் வாழும் குடிகள் அமைதியின்றி தட்டுகிட்டு தடுமாறிப் பல இடங்களிலும் பரவினார்கள்

அந்தணர் வகுப்பில் அநேகர், அதில் ஒருவகை அஷ்டசகஸ்ரம்(என்னாயிரர்), 
இதில் அந்தியூர், அருவப்பாடி, நந்திவாடி என்பன மூன்று பிரிவு. இதுபோல்
வடமரிலும் , பிரகசரணரிலும் பலவகை உள்ளவாம். அஷ்டசகஸ்ரத்தை பற்றி மகா கவியாகிய கம்பர்.

"இருபிறப்பானா என்னாயிரர் மனிக்கலசமேந்தி
அருமறைவருக்க மோதி அருள்நீர் அளித்துச் சூழ
வரன்முறை வந்தோர் கோடி மங்கள மழலைச் செவ்வாய்
பருமணிக் கலாபந்தர் பல்லாண்டிசை பரவப் போனார்"

என்ற கவியினால் எனாயிரர் அந்தணர் அயோத்தியில் தசரத மகாராஜாவின் பக்கலில் இருந்ததாகவும் அவர்கள் மண்ணை தனது குமாரன் ராமபிரான்
மனத்தைக் குறித்து மிதிலைக்குச் செல்லும்போது இவர் தம்பதிகளோடு மண்ணை ஆசிர்வதித்து உடன் சென்றார்கள் என்பது இக்கவியால் நன்கு விளங்கும். ஆதலின் இவ் வென்னாயிரர் பூர்வம் கங்கையின் பக்கத்திலுள்ள அயோத்தியில் இருந்தார்கள் என்பதும் பின்பு கால மாறுபாடுகளால் பல இடங்களிலும் பரவினார்கள் என்பதும் விளக்கமாய் அறியப்படுகிறது

தொடரும் ...................தொடர்ந்து வாருங்கள் .



No comments:

Post a Comment