Monday, September 3, 2012

தினசரி தியானம்

யோக நித்திரை

உறக்கத்திலும் விழிப்பிலும் உன்னையே சார்ந்திருக்க அருள்வாய், ஈசா.

விழித்திருக்கும்போது மனம் வியவகார மற்றிருக்கவேண்டும். அதனால் பேருணர்வு உறுதி பெறுகிறது. பின்பு, உறக்கத்திலும் அப்பேருணர்வு மறைக்கப்படாதிருக்கிறது. விழிப்புக்கும் உறக்கத்துக்கும் வேற்றுமை அகலும்போது யோக நித்திரை அடையப் பெறுகிறது.

தூங்கிவிழித் தென்னபலன்
தூங்காமல் தூங்கிநிற்கும்

பாங்குகண்டால் அன்றோ
பலன்காண்பேன் பைங்கிளியே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment