Sunday, September 23, 2012

பருப்பு ரசம், பருப்பு ரசம், பருப்பு ரசம்

பருப்பு ரசம்                          By: Savithri Vasan


பொதுவா  ரசம் வைக்கரோம்னா  சாம்பாருக்கு பருப்பு போட்டு
இருந்தால் அதில் நீராக இருத்து   அதை கொதிக்கும்  ரசத்தில் விட்டு
விளாவி  அதை ரசமாக வைப்போம் . அனால் இது பிரத்யேக பருப்பு
ரசம் .


தேவை:-

துவரம்பருப்பு  1/2 ஆழாக்கு
புளி : எலுமிச்சை அளவு (புளி கரைசல் தயார் செய்ய)
தக்காளி:            : 2
மஞ்சள் பொடி : கொஞ்சம்
குழம்பு பொடி  2 டீஸ்பூன்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு : தேவைக்கேற்ப

தாளிக்க:-

கடுகு, மிளகாய் வெத்தல்

கருவேப்பிலை , கொத்தமல்லி




பருப்பை வேக வைக்கவும்


புளி  கரைத்து , கொஞ்சம் சாம்பார் பொடி போட்டு, பெருங்காயம்
உப்பு சேர்த்து , தக்காளி நறுக்கி போட்டு கொதிக்க வைக்கவும்

பொடி வாசனை போக கொதித்ததும் , வேகவிட்ட பருப்பை
நன்றாக மசித்து இதில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்

கடுகு , மிளகாய் வற்றல் நெய் விட்டு தாளிக்கவும்

கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்க்கவும் .






குறிப்பு:- தக்காளியை நெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடும்

                  தக்காளியை நன்றாக கைகளால் நசுக்கி போட்டும் செய்யலாம்

                  தனியாக ரசப்பொடி செய்து போட்டால் அதன் சுவை அலாதி

                  ஈய சொம்புல வைங்க  அப்புறம் சுவைய சொல்லுங்க

ரசம் பருப்பு ரசம் , ஈயசொம்பில் வைத்த சுவையான ரசம் வேணுமா


No comments:

Post a Comment