Sunday, September 9, 2012

நாலடியார் -- (354/400)

நாலடியார் --  (354/400)
------------------------------

கோடேந்து அகலல்குல் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; -- கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யாவர்.

பொருள்:- பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலை உடைய நல்ல
மாதர், பணிப்பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்ளாதது போல்,
தம் பெண்மை இயல்பை அலங்கரித்து வெளிப்பட காட்டிக் கொள்ள
மாட்டார்கள். ஆனால், தீய ஒழுக்கம் உடைய பெண்களோ, புது
வெள்ளம்போல், தம் பெண்மையை அலங்கரித்துக் காட்டி, தாமே
தம்மை மிகைப்படுத்தி வரம்பு மீறி நடந்து கொள்வர்.




No comments:

Post a Comment